Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றங்களே சரியில்லை: சாருஹாசன் அதிரடி பேட்டி

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (09:59 IST)
நான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வந்தவன் என்றும் இந்த நீதிமன்றங்களே சரியில்லை என்றும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அதிரடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அந்த பேட்டியில் கூறிய சாருஹாசன், 'தூத்துகுடி போராட்டத்தில் ஒருசிலர் நுழைந்து குழப்பம் விளைவித்ததால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தூத்துகுடியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு எதற்கு விசாரணை கமிஷன்? நான் விசாரணை கமிஷனில் நம்பிக்கை இல்லாதவன். நான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வாதாடியவன். இந்த நீதிமன்றங்களே சரியில்லை' என்று கூறியுள்ளார்.
 
தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் கலவரம் ஏற்பட்டது என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் அவருடைய கருத்தை ஆமோதிப்பது போலவே சாருஹாசனின் பேட்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments