Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் புதிய தொழில்நுட்ப மையம்! – அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (08:30 IST)
பேட்டரி சக்தியில் இயங்கும் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் தேவையும், எரிபொருளால் ஏற்படும் மாசுபாடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் எரிபொருள் வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக மின்சார வாகனங்களுக்கு தேவையான லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப மையம் சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது. சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments