Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (08:19 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிட்ட நிலையில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது 
 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலில் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுவதாகவும் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
 
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலை 6.30 மணி முதல் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும் வரை இந்த வாக்குகளை என்ன கூடாது என்று நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments