Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில்பாலாஜி படித்த அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் கொண்டாட்டம்

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (16:10 IST)
செந்தில்பாலாஜி படித்த அரசு கலைக்கல்லூரியில் இனிப்புகள் வழங்கி  விளையாட்டுத்துறை மாணவர்கள் கொண்டாட்டம்
 
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட கரூர் வி.செந்தில்பாலாஜி, பதவியேற்றதை தொடர்ந்து அவர் படித்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டுத்துறை மாணவர்கள் சார்பாக, இயக்குநர் உடற்கல்வித்துறை ராஜேந்திரன் தலைமையில், மாணவர்கள் ஏராளமானோர் மற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

வெடி வைக்காமல், அரசு உத்திரவின்படி கொரோனா பரவலை தடுக்கும் விதிகளை பின்பற்றி, அரசு கலைக்கல்லூரியின் முன்புறம் ஏராளமான மாணவர்கள் சமூக இடைவெளி விட்டும், முகக்கவசங்கள் அணிந்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், இந்த அரசு கலைக்கல்லூரிக்கும், இந்த கல்லூரியில் பயின்ற மற்றும் பயிலும் மாணவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைச்சர் செந்தில்பாலாஜி முன் மாதிரியாக இருந்து வருவதாகவும், கரூருக்கு பெருமை இந்த கல்லூரிக்கு இவரால் பெருமை என்றும் மாணவர்கள் கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி இயக்குநர் உடற்கல்வித்துறை ராஜேந்திரன் உள்ளிட்ட விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments