Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்.! மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி அதிரடி..!

Senthil Velan
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (12:54 IST)
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவிகளின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
திருவான்மீயூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா நிறுவப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ALSO READ: மாணவிகள் பாலியல் விவகாரம்.! தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!
 
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிந்து, அடுத்த ஓரிரு மாதங்களில் சிசிடிவி கேமராக்கள், பள்ளிகளில் பொருத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்