Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ மாணவியை கொன்றவன் ஒரு சைக்கோ.. மனோதத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள்..!

Mahendran
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (12:50 IST)
கொல்கத்தா மருத்துவ மாணவியை கொலை செய்த சஞ்சய் ராய் ஒரு சைக்கோ என்று மனோதத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சஞ்சய் ராய் அடிக்கடி ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவன் என்றும் ஆபாச படத்தில் மூழ்கி அதற்கு அடிமையாகி மிருகத்தனமான இச்சைகள் இருந்துள்ளது என்றும் மனோதத்துவ பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் எந்த குற்றத்தை செய்தாலும் அது குறித்து கவலையோ குற்ற உணர்வு கொள்வதில்லை என்றும் சிபிஐக்கு மனோதத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் சஞ்சய் ராயிடம் விசாரணை செய்தபோது தான் செய்த குற்றத்திற்கு அவர் எந்த விதத்திலும் வருந்தவில்லை என்றும், தான் செய்த கொலையில் உள்ள சில நுணுக்கமான தகவல்களை கூட தன்னிடம் மறக்காமல் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் குறித்து எந்த கவலையும் கொண்டதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே சஞ்சய் ராய் கொலை செய்வதற்கு முன்பு ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வந்ததாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments