Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

Advertiesment
vijayabaskar

Siva

, வியாழன், 11 ஜூலை 2024 (10:05 IST)
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

நூறு கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில் எம்ஆர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டு இருப்பதாக புகார் அளித்துள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய முன் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவரது தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருக்கமான சிலருடைய வீட்டில் சமீபத்தில் சோதனை நடந்த நிலையில் தற்போது ஈரோடு மண்டல அதிமுக ஐடி விங் நிர்வாகி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினரான கவின்ராஜ் வீட்டில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

அவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி கவின்ராஜிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது.. என்ன காரணம்?