Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கேன் தண்ணீர் விலை: தொடரும் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (11:33 IST)
சென்னையில் கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் குடிதண்ணீர் கேன்களின் விலை ஏற தொடங்கியுள்ளது.

தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

இதற்கு கேன் குடிநீர் விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுமதி பெறாத ஆலைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சீல் வைக்கக்கூடாது என்றும், இதனால் கேன் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் சிரமப்படுவார்கள் என கூறியுள்ளனர். தற்போது ஆலைகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் தண்ணீர் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சிலர் கேன் தண்ணீர் விற்பனையை நிறுத்தி போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர்.

விற்பனையாளர்களின் போராட்டம் மற்றும் குடிநீர் ஆலைகள் மூடல் ஆகியவற்றால் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் மற்ற கேன் தண்ணீர் நிறுவனங்கள் விலையை அதிகரித்து விற்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் நகர மக்கள் கேன் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருவதால் இது மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments