Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 மாவட்டங்களில் கட்டுபாடுகளுடன் பேருந்து சேவை துவக்கம்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (08:18 IST)
ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கியது. 

 
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் 50% பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
 
அதன்படி இன்று காலை 6 மணிக்கு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் ஓட தொடங்கியது. பேருந்துகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்றும் முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் மொத்தம் 9,333 பேருந்துகள் தளர்வளிக்கப்பட்ட மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், குளிர் சாதன வசதி இல்லாமல் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments