Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ்சை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பஸ்சில் ஏறி ஓடிய டிரைவர்!!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (19:17 IST)
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த பஸ்சை பாதியில் நிறுத்திய டிரைவர் வேறு பஸ்சில் ஏறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பஸ் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் அதனை தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது. இதனால் பயணிகள் பலர் அவரை எச்சரித்துள்ளனர்.
 
அதன் பின்னரும் பஸ்சை டிரைவர் தாறுமாறாகவே ஓட்டியுள்ளார். இதையடுத்து திடீரென சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த வழியாக சென்ற மற்றொரு அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார். 
 
இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் பஸ் கண்டக்டர்  போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி மாற்று டிரைவர் அனுப்பும்படி தெரிவித்துள்ளார்.
 
சுமார் 2 மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து பஸ்சை இயக்கினார். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பின்வருமாறு கூறினர், டிரைவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லை. இதற்கிடையே பஸ்சை ஓட்டும்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
 
இதனால்தான் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி, மற்றொரு பஸ்சில் ஏறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments