Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎஸ்என்எல் சேவை முடக்கம்? தவிக்கும் வாடிக்கையாளர்கள்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (19:40 IST)
பிஎஸ்என்எல் அறிவித்தது போல நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல் சேவைகள் பல முடங்கியுள்ளது. 
 
4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லை தனியார்மயமாக்க கூடாது போன்ற பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
 
தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்வேறு பணிகள் முடங்ககியுள்ளது. வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 
இதுகுறித்து பிஎஸ்என்எல் தரப்பில், 4ஜி சேவையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது எழுத்து பூர்வமான உத்தரவாதத்தை அளித்தால் மட்டுமே எங்களது போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெறுவோம்.

மக்கள் நலன், நிர்வாக நலன் சார்ந்தே எங்கள் போராட்டம் அமைந்துள்ளது. எனவே மத்திய அரசு உரிய பதிலை எங்களுக்கு அளிக்க வேண்டும். 4ஜி சேவையை வழங்கினால் தான் வருவாயை அதிகப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், இன்றைய போராட்டத்தினால் கட்டணம் செலுத்தும் மையங்கள் மற்றும் அலுவலகங்கள் முற்றிலும் முடங்கி போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments