Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிற்குள் வரக்கூடாது எனக் கூறிய அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (07:52 IST)
வீட்டிற்கு உள்ளே வராதே எனக் கூறிய அக்காவை, அவரது தம்பியே ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவருக்கு சரவணகுமார் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சங்கீதாவிற்கு திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சங்கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வந்தார். இது சங்கீதாவின் தம்பி சரவனக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் சரவணகுமாருக்கும், சங்கீதாவுக்கும், இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் உறவினர் வீட்டில் வசித்து வந்த சரவணகுமார், தாயை பார்ப்பதற்காக தன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டில் அவரது தாய் இல்லை. அப்போது வீட்டில் இருந்த சங்கீதா,  வீட்டிற்குள்ளே வராதே என திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணகுமார் சங்கீதாவை அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார். மேலும் அவரது பிணத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments