Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் ஆள்மாறாட்டம்: இடைத்தரகருக்கு சிபிசிஐடி போலீசார் வலை

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (06:49 IST)
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் வலைவிரித்துள்ளதாகவும், அந்த இடைத்தரகர் கேரளாவில் இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து சிபிசிஐடி போலீசார் கேரளா விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
 
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்த சிபிசிஐடி போலீசார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
 
 
இந்த நிலையில், ஆள்மாறாட்டம் குறித்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபர் கேரளாவில் இருப்பதாகவும், அந்த இடைத்தரகர் உதித் சூர்யாவை போல் பல மாணவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்ய உதவியதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.
 
 
இந்த நிலையில் மேலும் 5 மாணவர்கள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மும்பையைச் சேர்ந்த கும்பல் ஒன்று இந்த ஆள்மாறாட்டத்திற்கு உதவியதாகவும் வெளிவந்துள்ள  தகவல்கள் நீட் தேர்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டீ குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக.. என்ன காரணம்?

பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

அடுத்த கட்டுரையில்
Show comments