Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயக்குமார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை..

Arun Prasath
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (16:39 IST)
டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரணடைந்த நிலையில், சிபிசிஐடி 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மற்றும் குரூப் 2 முறைக்கேடு தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் வலை வீசி தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். ஜெயக்குமாரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி அனுமதி கோரியது. இந்நிலையில் ஜெயக்குமாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் தான் உள்நாட்டு போர் ஏற்படுகிறது: பாஜக எம்பி

எல்லா பேருந்து நிலையத்திற்கும் கருணாநிதி பெயரா? மன்னார்குடி பேருந்து நிலைய பெயர் மாற்றத்திற்கு சீமான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments