Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடியும் ஆதரவாக பச்சை கொடியும்: பரபரப்பில் தமிழகம்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (13:44 IST)
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி ராணுவ கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட பாரத பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார். சென்னையில் இருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் திட்டத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி திமுகவினர் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சை கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் மு.க.ஸ்டாலின் யோசனைக்கு பாஜக தலைவர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments