Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தோல்வி ஏன்? அண்ணாமலை செயல்பாடு எப்படி? வானதி, பொன்னாரிடம் விளக்கம் கேட்ட பாஜக..!

Mahendran
புதன், 12 ஜூன் 2024 (18:04 IST)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், தோல்விக்கு விளக்கம் கேட்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தமிழக பாஜக தலைவர்களுக்குகடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகம், புதுவை என 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கோயல், தமிழகத்தில் தோல்வி ஏன் என்பது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் அந்த கடிதத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு எப்படி உள்ளது? என்றும் அவர் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் எந்த விதமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார் என்றும் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரும் கட்சி மேல் இடத்திற்கு அண்ணாமலை குறித்து அறிக்கை அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments