பாஜக கூட்டணி முறிவு; எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு? – மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (11:36 IST)
சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டு முதலாக பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது அதிமுக. அதை தொடர்ந்து அதிமுகவினர் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்துள்ள இந்த சமயத்தில் இந்த செயலை பாஜகவினர் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments