Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினர்களை விமர்சிக்க வேண்டாம்: வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:59 IST)
காவல்துறையினர்களை விமர்சிக்க வேண்டாம்:
மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், காவல் துறையினரை தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் எந்த வடிவிலும் விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
ஊரடங்கு உத்தரவின்போது வெளியே செல்லும் பொதுமக்களை காவல்துறையினர் அடித்து விரட்டி வரும் நிலையில் ஒருசில வழக்கறிஞர்களும் இதில் சிக்கி, காவல்துறையினர்களை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் காவல்துறையினர்களை இந்த நேரத்தில் விமர்சனம் செய்ய வேண்டாம் என பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவிற்கு எதிராக மனிதகுலமே போராடி வரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இதில் வழக்கறிஞர்கள் பங்கு அதிகம் இருப்பதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments