Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

Siva
வெள்ளி, 22 நவம்பர் 2024 (16:02 IST)
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் பணிபுரியும் பாலாஜி என்ற மருத்துவரை கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய விக்னேஷ் என்பவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜி, கடந்த 13ஆம் தேதி விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, விக்னேஷ் கைது செய்யப்பட்டு, அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி, விக்னேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவல்துறை தரப்பில், “மக்கள் அதிகம் நடமாடும் மருத்துவமனையில் ஆயுதம் எடுத்து வந்து, மருத்துவரை தாக்கியுள்ளார். மேலும், விசாரணை நடைபெற்று வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவல்துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்க.. முடியல! - போராட்டத்தில் குதித்த அமெரிக்க மக்கள்!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு.. டிரம்ப் அதிரடி நடவடிக்கைகள் காரணமா?

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு: காவல் நிலையத்தை சூறையாடிய மக்கள்..!

ரெப்போ வட்டி விகிதம் குறைவு.. வீடு, வாகனம் லோன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி..!

இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி! பெண் எஸ்.ஐ. மீதான தாக்குதலுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments