Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாவை அவமதித்து பேசிய பத்ரி சேஷாத்ரி..! – ஆலோசனை குழுவிலிருந்து நீக்கி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (16:17 IST)
முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்த பத்ரி சேஷாத்ரியை இணையக்கல்வி ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கியுள்ளது.

கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வருபவர் பத்ரி சேஷாத்ரி. சமீபத்தில் இவர் அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை சந்தித்துள்ளது. பத்ரி சேஷாத்ரி தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரது சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவரை ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கி மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார் “கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. பத்ரி சேஷாத்ரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.” என பதிவிட்டுள்ளார்.

அதை ரீட்வீட் செய்துள்ள பத்ரி சேஷாத்ரி “இதுதான் அண்ணாவின் வெற்றியா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments