Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டி நிறுத்துவதில் வாக்குவாதம் – கோவையில் ஆட்டோ டிரைவர் கொலை !

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (14:20 IST)
கோவை ஐடி பார்க் முன்பு வாகனங்களை நிறுத்துவதில் இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள கோவிலாம்பாளையம் காவல்கோட்டத்துக்கு உட்பட்ட கீரணத்தம் பகுதிக்கு ஆட்டோ ஓட்டுனர் அருண் பிரசாத் வந்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவுக்குப் பக்கத்திலேயே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

வண்டியை உரசுவது போல அருகிலேயே நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் முற்றிய வாக்குவாதத்தில் வண்டியில் வைத்திருந்த சில கட்டுமானப் பொருட்களால் அருண்பிரசாத்தைத் தாக்கியுள்ளனர்.

இதில் அவரது கை,மார்பு, வயிறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அதனையடுத்து அவரை அங்குள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்க கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments