Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் ஆள்மாறாட்ட வழக்கு – மாணவனின் தந்தை போலி மருத்துவரா ?

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (13:55 IST)
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவன் இர்பானின் தந்தை முகமது சஃபி போலி மருத்துவர் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து தருமபுரியை சேர்ந்த டாக்டர்.சஃபியின் மகன் முகமது இர்ஃபான் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. தருமபுரி மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்த இவர் மொரிசியஸ் தப்பி சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவில் இருந்து இர்பான் பற்றிய தகவல்கள் மொரிசியஸுக்கு அனுப்பப்பட்டு இர்ஃபானை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப மொரிசியஸ் அரசாங்கம் சம்மதித்தது.

இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இர்பானின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி மருத்துவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் என்பதி சிபிசிஐடி போலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments