'' நீ சந்தோஷமா இரு''...காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த காதலன்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (21:02 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காதலியின் தாய் திட்டியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் சசிக்குமார். இவர் அங்குள்ள ஒரு தனியார் செல்போன் விற்பனை கடையில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு அதேகடையில் பணியாற்றிய சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், இருவீட்டிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்த நிலையில், பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்கியுள்ளார் சசிக்குமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில்,    சசிக்குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பதாக தன் காதலிக்கு,  ''நான் பிறந்திருக்கவே கூடாது;  நீ சந்தோஷமா இரு'' என்று மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் காதலியின் தாய் திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments