Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது: அமைச்சர் ரகுபதி

Mahendran
திங்கள், 12 பிப்ரவரி 2024 (12:36 IST)
ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்க மறுக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசின் உரையில் இருந்து ஒரு வார்த்தையை கூட ஆளுநர் பேசவில்லை. உரையில் உள்ளதை பேசாமல், தனது சொந்த கருத்தை ஆளுநர் பேசியுள்ளார். கேரள ஆளுநராவது, உரையில் இருந்த ஒருசில வரிகளையாவது பேசினார் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
 
ஆளுனரின் உரை புறக்கணிப்பு குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியபோது, ‘முதலில் தமிழ்தாய் வாழ்த்து, பிறகு ஆளுநர் உரை, இறுதியாக தேசியகீதம் என்பதே அவை மரபு. பேரவை விதிகளின்படியே முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது
 
தேசிய கீதம் இசைத்துதான் ஆளுநரை அழைத்து வந்தோம், ஆளுநரின் சொந்தக்கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். மேலும் அவை மரபை மீறி ஆளுநர் செயல்படுவது முறையற்றது, நாகரீகமற்றது என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments