Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! – ஆசாமியை தேடி வரும் போலீஸ்!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (08:34 IST)
தமிழகத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் இருந்து வரும் பிரபலங்களான கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மமான போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் இல்லத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளில் சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரஜினி, விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் புவனெஷ்தான் இதையும் செய்தாரா என்றும் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments