Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியே வராமல் வாக்கு கேட்பது இதுவே முதல்முறை! – மு.க.ஸ்டாலின் குறித்து அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (12:41 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் வெளியே வராமல் வாக்கு சேகரிப்பது இதுவே முதல்முறை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாஜக தமிழகம் முழுவதும் தனியாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக மாநில தலைவரான அண்ணாமலை மாவட்டங்கள்தோறும் பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய அவர் “தமிழ்நாட்டில் தேர்தல் ஒன்றிற்கு முதல்வர் வெளியே வராமல் காணொலி மூலமாக வாக்கு கேட்பது இதுவே முதல்தடவை. திமுகவினர் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு ஒன்றிற்கு ரூ.15 என்ற அளவில் ஊழல் செய்துள்ளனர்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments