Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவர் ஜெயிலில்.. இன்னொருவர் வேடந்தாங்கல் பறவை போல்.. கரூர் குறித்து அண்ணாமலை விமர்சனம்..!

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (07:58 IST)
கரூர் மாவட்ட திமுக செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என்றும் கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல அவ்வப்போது தொகுதி பக்கம் வந்து செல்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்
 
கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் ஜோதிமணி போட்டியிடும் நிலையில் அவர் தொகுதி பக்கமே வருவதில்லை என்று அந்த தொகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
 
இது குறித்து கருத்து கூறிய அண்ணாமலை, கரூர் எம்பி ஜோதிமணி தொகுதி பக்கமே வருவதில்லை என்றும் வேடந்தாங்கல் பறவை சீசனுக்கு மட்டும் வந்து செல்வதை போலவே ஜோதிமணி கரூர் தொகுதிக்கு வந்து செல்கிறார் என்றும் கூறியிருந்தார்

அதேபோல் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக அறிவித்த 521 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அப்படி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறினால் அதை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments