Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி குறித்த சர்ச்சை கருத்து: அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு அண்ணாமலை கண்டனம்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (14:06 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்தது என்பதும் சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது என்பது தெரிந்ததே
 
அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தது குறித்து விசாரணை அறிக்கையில் உள்ள கருத்துக்களை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்த அண்ணாமலை, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகர்கள் கருத்து தெரிவிக்கும்போது ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை என்றும் நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முழு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments