எங்களுக்கு ‘துணிவு’ இருக்கு.. ‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறோம்! – ரைமிங்கில் பேசிய அண்ணாமலை!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (09:31 IST)
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுனர் பேசியதை திமுக திட்டமிட்டு அரசியலாக்குவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் ஆளுனர் சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு பேசியதாக எழுந்த சர்ச்சையில் ஆளுனர் பாதியிலேயே கூட்டத்தொடரில் இருந்து வெளியேறினார். இது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் ஆளுனர் செய்தது தவறு என்று திமுகவும், திமுக செய்தது தவறு என எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் திண்டுக்கலில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “முதலமைச்சர் ஸ்டாலின் கூட இதற்கு முன்பு தமிழ்நாடு, தமிழகம் என்ற இரண்டு வார்த்தைகளையுமே பயன்படுத்தியுள்ளார். ஆனால் ஆளுனர் பேசியதை வைத்து திமுக அரசியல் செய்கிறது” என்று பேசியுள்ளார்.

மேலும் மக்களுக்காகவே ஆளுனர் உள்ளதாகவும், அவருடன் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறிய அவர், அரசியலில் துணிவுடன் செயல்பட்டு வருவதாகவும், வாரிசு அரசியலை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments