Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதா பெயரில் அரியலூரில் மருத்துவமனை - ஆனந்தராஜ் அதிரடி

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (17:07 IST)
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்த ஏழை மாணவி அனிதாவின் பெயரில் அரியலூரில் அரசு மருத்துவமனையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என நடிகர் ஆனந்த ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.


 

 
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். 
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஆனந்தராஜ் “ நீட் தேர்வு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய சமரசங்களை ஏற்க முடியாது. நீட் தேர்வை தடுக்க தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதன் விளைவாகவே அனிதா தற்கொலை செய்து கொண்டார். 
 
இதற்கு அரசு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தால், அனிதா வசித்து வந்த அரியலூர் குழுமூரில் அனிதாவின் பெயரில் ஒரு மருத்துவமனையை தமிழக அரசு அமைக்க வேண்டும். அது முடியாது எனில், அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான ஆதரவையும், அனுமதியையும் அரசு அளிக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments