Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரை சந்திக்க இருக்கும் தினகரன்: கலக்கத்தில் எடப்பாடி!

ஆளுநரை சந்திக்க இருக்கும் தினகரன்: கலக்கத்தில் எடப்பாடி!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (16:44 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குறிப்பிட்ட சில எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரனால் தற்போது அதிமுக தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தினகரன் தமிழக ஆளுநரையும் சந்திக்க உள்ளார்.


 
 
அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்று சேர்ந்ததை அடுத்து தினகரன் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர்.
 
இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 16 நாட்களாக அவர்கள் புதுச்சேரியில் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் தினகரன் தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை நாளை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆளுநர் இவர்களுக்கு நேரம் ஒதுக்கி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் எடப்பாடி தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments