Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இனிமே எதுக்கு வாழணும்.!!?” - அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:57 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில் 8வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்டவர் ராமஜெயம். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் ராமஜெயம் 5 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த ராமஜெயம் இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments