Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் நிறுவனரின் போன் ஒட்டுக் கேட்பு.... சவுதி இளவரசர் மறுப்பு !

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (19:50 IST)
உலகில் மிகப் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் செல்போனை ஹேக் செய்து ஒட்டுக் கேட்கப்பட்டதாக இளவரசர் முகமது பின் சல்மான் உளவு பார்த்ததாக பரவலாக செய்தி வெளியானது. இந்நிலையில் இதை சவூதி அரசு மறுத்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சவூதி இளவசர் முகமது பின் சல்மான் மற்றும்  அமேசான் நிறுவனர் ஜெப் ஆகியோர் நட்பின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
 
அதன்பின் சுமார் 1 மணி நேரத்திலேயே ஜெப்பின் மொபைல் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்து தகவல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் வெளியாகவும் தகவல் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இதுகுறித்து ஜெப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளதாவது : பெசோசின் செல்போனில் இருந்து சவூதி அரசு தகவல்களை எடுத்துள்ளனர். ஜெப்பின் மொபைல் போனை சவூதி அரசு உளவு பார்த்ததை எங்கள் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.  
 
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சவூதி அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments