Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தடை இல்லை: முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!

Mahendran
திங்கள், 5 பிப்ரவரி 2024 (16:47 IST)
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவரது முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
முன்னதாக பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாக இருப்பதாக கூறப்படு கிறது.  அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா ஆகியோர் ஆண்டாள் என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது சகோதரியையும் தாக்கியதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்நிலையில் குஜராத் மும்பை ஆகிய பகுதிகளில் அமர் பிரசாத் ரெட்டியை தனிப்படை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments