Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (21:06 IST)
தமிழகத்தில் உள்ள +2 மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் தொடங்க ஏற்பாடு செய்யுமாறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் +2  மாணவர்களுக்கு மின்னஞ்சல் தொடங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
ஜூலை 30-ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. +2  மாணவர்களுக்கு ரிசல்ட் உள்பட பல்வேறு தகவல்கள் இனி மின்னஞ்சல் மூலம் அனுப்ப வாய்ப்பு இருப்பதால் அனைவருக்கும் மின்னஞ்சல் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து நாளை முதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் தொடங்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments