இருக்குற பஞ்சத்துல இவங்க வேற – தண்ணீர் குழாயை உடைத்த ஏர்டெல் நிறுவனம் – கடுப்பான மக்கள்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (13:48 IST)
கடலூர் பகுதியில் நிலத்தடியில் கேபிள் பதிக்கும்போது அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாயை உடைத்துவிட்டு மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

கடலூர் அருகே திட்டக்குடியில் தொலைதொடர்பு கேபிள்களை நிலத்தடியில் பதிக்கும் பணியில் ஈடுப்பட்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். அந்த பகுதியில் திட்டங்குடி பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் செல்கிறது. திட்டக்குடி முதல் கூத்தன்குடிகாடு வரை உள்ள கிராமப்பகுதிகளுக்கு இந்த நிலத்தடி குழாய் வழியாகதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வயர்களை பதிப்பித்த பிறகு அங்கே குறியீட்டு கல் வைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி கொண்டு கொட்டியிருக்கிறது. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டக்குடி பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

பல பகுதிகள் தண்ணீர் இல்லாமல் திண்டாடி கொண்டிருக்க கிடைத்த தண்ணீரையும் இப்படி உடைத்து விட்டு கெடுத்து விட்டார்களே என திட்டக்குடு சுற்றுவட்டார மக்கள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments