தேர்தல் பணப்பட்டு வாடாவை துவங்கிய அதிமுக ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ

J.Durai
திங்கள், 18 மார்ச் 2024 (09:08 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
 
இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேதி அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அமலுக்குள் வர உள்ளது.
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேட்டி, சேலை மற்றும் அதிமுக இரட்டை இலை சின்னம் பொருந்திய கவரில் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசியல் கட்சியினர் எப்போதும் போல பணப்பட்டுவாடாவை துவங்கியுள்ளனரா என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடயே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments