Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் நேஷனல் வங்கி பாணியில் சென்னை வங்கியில் ரூ.12.8 கோடி மோசடி

Webdunia
ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (09:00 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி குறித்த செய்தியையே இன்னும் பொதுமக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னை சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12.8 கோடி மோசடி நடந்துள்ளதாக வந்துள்ள செய்தி திடுக்கிட வைத்துள்ளது

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் பாணியிலேயே சென்னையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியிலும் 12.8 கோடி ரூபாய் மோசடி நடந்துள்தாக அவ்வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது  ஒரு வங்கியில் இருந்து வெளிநாட்டில் உள்ள இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் ஸ்விபட் என்ற முறையின் அடிப்படையில் தான் பணத்தை அனுப்ப வேண்டும். இவ்வாறு பணம் அனுப்புவதற்கு முன் எந்த வங்கியில் இருந்து பணம் அனுப்புகிறமோ, அந்த வங்கிக்கு கட்டாயம் தகவல் அனுப்ப வேண்டும். இந்த தகவலை அனுப்பாமல் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி நடந்துள்ளது. தற்போது சிட்டி யூனியன் வங்கியிலும் இதே பாணியில் மோசடி நடந்துள்ளது. மேலும் இதே போல் இன்னும் எத்தனை மோசடி வெளிவரபோகின்றதோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments