Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த ரூ.11,400 கோடி மோசடி - அதிர்ச்சி செய்தி

Advertiesment
பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த ரூ.11,400 கோடி மோசடி - அதிர்ச்சி செய்தி
, வியாழன், 15 பிப்ரவரி 2018 (10:26 IST)
மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை வைர வியாபாரி ஒருவருக்கு ரூ.11.400 கோடி கொடுத்து  மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது..

 
நிரவ் மோடி என்பவர் மும்பையில் தொழிலதிபர்களில் ஒருவர். வைர வியாபாரம் இவரின் முக்கிய தொழில் ஆகும். பஞ்சாப் நேஷனல் மும்பை பரோடு கிளையில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள், வங்கி பணம் ரூ.11,400 கோடியை, வங்கி ஆவணங்களில் குறிப்பிடாமல், எந்த ஆவணங்களும் இல்லாமல் நிரவ் மோடிக்கு கொடுத்துள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளது.
webdunia

 
இந்திய விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்ய மறுத்து வரும் மத்திய அரசு வங்கிகள், இப்படி ஒரு வைர வியாபாரிக்கு ரூ.11,400 கோடி தூக்கிக் கொடுத்துள்ள விவகாரம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - தமிழகத்தில் மின்சாரம் கட்?