Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் அதிகரிப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:29 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதையும் கிலோ ரூபாய் 80 முதல் 100 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையில் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் ஏறி வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உருளைக்கிழங்கின் அளவு வெகுவாக குறைந்தது. இதுவே உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தின் காரணமாகும்
 
ஒருசில நாட்களுக்கு முன் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த உருளைக்கிழங்கு தற்போது 80 ரூபாய் வரை விற்பனை ஆவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு தான் சமையலுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் இரண்டுமே விலை உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் சிரமத்தில் உள்ளன 
 
வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு விலையை குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க என கோரிக்கை விடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments