Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போவே எனக்கு பதவி ஆசை இல்லை: மு.க.அழகிரி

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (14:41 IST)
கருணாநிதி இருக்கும் போதே எனக்கு பதவி ஆசை இல்லை. இப்போதா ஆசைப்பட போகிறேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதன் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
 
செப்டம்பர் 5ஆம் தேதி மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது:-
 
கருணாநிதி இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அகழிரி திமுக கட்சியில் மீண்டும் சேர உள்ளதாகவும் அவருக்கும் கட்சியில் ஒரு பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. பின்னர் ஸ்டாலின், அழகிரியை கட்சியில் சேர்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற செய்திகளும் வெளியானது.
 
இந்நிலையில் தனது ஆதங்கத்தை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறிய அழகிரி தற்போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments