விருப்பமனு கொடுக்கும் தேதியை திடீரென குறைத்தது அதிமுக!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (16:41 IST)
அதிமுகவில் விருப்ப மனு கொடுக்கும் தேதி திடீரென குறைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. திமுக உள்பட மற்ற கட்சிகள் விருப்ப மனுவை பெற்று விட்டு நேர்காணலை தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 5ஆம் தேதிக்குள் விருப்பமனுவை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி இரண்டு நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது
 
இதன்படி மார்ச் 3ஆம் தேதி தான் விருப்பமனு கொடுக்க கடைசி தினம் என்றும் அன்றைய தேதிக்குள் தமிழ்நாடு புதுச்சேரி கேரளாவில் போட்டியிட விரும்பும் மனு வாங்கியவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமனு கொடுக்கும் தேதி இரண்டு நாள் குறைக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் நாட்டை 5 நாளைக்கு தாக்கமாட்டோம்!. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு...

விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாலிபர் மரணம்!..

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு!.. 9 பேரும் குற்றவாளிகள்!...

சிவகார்த்திகேயனுக்கு சனி பிடிச்சிடுச்சி!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய நாஞ்சில் சம்பத் கலாய்!...

நம்மகிட்ட 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருக்கு!.. மோடி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments