விருப்பமனு கொடுக்கும் தேதியை திடீரென குறைத்தது அதிமுக!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (16:41 IST)
அதிமுகவில் விருப்ப மனு கொடுக்கும் தேதி திடீரென குறைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. திமுக உள்பட மற்ற கட்சிகள் விருப்ப மனுவை பெற்று விட்டு நேர்காணலை தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 5ஆம் தேதிக்குள் விருப்பமனுவை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி இரண்டு நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது
 
இதன்படி மார்ச் 3ஆம் தேதி தான் விருப்பமனு கொடுக்க கடைசி தினம் என்றும் அன்றைய தேதிக்குள் தமிழ்நாடு புதுச்சேரி கேரளாவில் போட்டியிட விரும்பும் மனு வாங்கியவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமனு கொடுக்கும் தேதி இரண்டு நாள் குறைக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...

வேலூரில் அடுத்த மீட்டிங்!.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!.. அரசியல் பரபர!..

மம்தாவின் கண்கள் கண்புரையால் மறைக்கப்பட்டுள்ளது: அமித்ஷா கடும் விமர்சனம்

களத்தில் அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களமாடும்.. மற்ற கட்சிகள் சிதறி ஓடும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய ராஜேந்திர பாலாஜி

இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments