Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டாவுக்கு வழிய காணோம், இதுல நினைவு ஊர்வலத்துக்கு பிளானிங்... என்ன அரசோ இது?

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (12:06 IST)
கஜா புயல் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கரையை கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை. 
 
மக்கள் இன்னும் பாதிப்புகளை இருந்து மீளாததற்கு தமிழக அரசின் மெத்தன போக்குதான் காரணம் என பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆளும் அதிமுக அரசை விமர்சித்து வருகின்றனர். 
 
ஆனால், அதிமுக அரசு இதை கண்டுக்கொள்ளாமல் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் வருகிற 5 ஆம் தேதி நினைவு ஊர்வலம் நடத்த திட்டம் போட்டு வருகிறார்கள். 
 
அதாவது, வருகிற புதன்கிழமை (5 ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே இருந்து துவங்கி ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தி பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சி அனைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த நினைவு ஊர்வளத்தில் அதிமுக தொண்டர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments