Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று: முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (12:01 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியமைக்க உள்ளார்.


 
 
ஆட்சியமைப்பதற்கான பணிகள் அதிமுகவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று மதியம் 2 மணியளவில் ஜெயலலிதா தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்.
 
இதனையடுத்து மாலை 5 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
 
பின்னர் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்வதற்கான கடிதத்தை வழங்குவார்கள். இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments