Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மட்டமான மத்திய அரசு: 5000 கோடி கேட்டா 500 கோடி தராங்க...

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (10:13 IST)
இயற்கை சீற்றங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
நேற்று காலை நாகை மாவட்டம் அருகே கரையை கடந்த கஜா புயல் பெரும் சேதங்களை உண்டாக்கி சென்றது. குறிப்பாக நாகை, தஞ்சை, வேதாரண்யம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க் கணக்கான கால் நடைகள் உயிரிழந்திருக்கின்றன. 
 
நிவாரணப் பணிகளும் மீட்புப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் தன்னார்வளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய அரசு போதிய நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது.
 
தமிழகத்தில் புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. 5000 கோடி கேட்டா 500 கோடி தராங்க. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் மத்திய அரசு மாநில அரசுகளை கண்டுகொள்வதில்லை என மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக காட்டமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments