Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுகவுக்கு பறிபோகும் அதிமுகவினர் பதவிகள்! – போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:56 IST)
புதிதாக அதிமுகவில் இணையும் அமமுகவினருக்கு பதவிகள் அளிக்கப்படுவதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கட்சிகளுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சில மாதங்களாக பல கட்சிகளை சார்ந்தோர் வேறு கட்சிகளுக்கு மாறுவதும், அவர்கள் புதிதாக சேரும் கட்சிகளில் பதவிகள் வழங்கப்படுவதும் மேல் மட்டத்திலிருந்து அனைத்து தரப்பிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமமுகவிலிருந்து புதிதாக அதிமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்பட்டிருப்பதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வரும் அதிமுக தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments