Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விரைந்த புதுச்சேரி அதிமுகவினர்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:22 IST)
புதுச்சேரியில் நாளை பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி அதிமுகவினர் சென்னை விரைந்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆட்சி செய்து வரும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் பதவி விலகிய நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுனராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாளை நாராயணசாமிக்கு அவகாசம் அளித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி அதிமுகவினரை உடனடியாக சென்னை அதிமுக தலைமை அலுவலகம் வர சொல்லி தகவல் வந்ததையடுத்து, அவர்கள் சென்னை விரைந்துள்ளனர்.

நாளை நம்பிக்கை தீர்மான நிறைவேற்றப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்ன சிறப்பு அம்சங்கள்?

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments