Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்களின் அரசியல் இனி எடுபடுமா? திருமாவளவன் பதில்

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (06:45 IST)
நடிகர்களின் அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
நேற்று திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ’நடிகர்களின் அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என்ற தமிழக முதல்வரின் கருத்து எனக்கும் உடன்பாடு தான். பொதுமக்கள் தற்போது அரசியல் விழிப்புணர்ச்சியுடன் இருக்கின்றார்கள். எனவே எம்ஜிஆர் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை போல் இனி எந்த நடிகர்களாலும் ஏற்படுத்த முடியாது என்றே கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.
 
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து தமிழகத்தில் இனி நடிகர்களின் அரசியல் எடுபடாது என்று கூறியிருந்தார்.
 
முதல்வர் கூறியது ஓரளவு உண்மை என்றே கருதப்படுகிறது. எம்ஜிஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசன், டி.,ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் மற்றும் சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் உள்பட இதுவரை யாரும் தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments