Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை! தனியார் பள்ளிகளை எச்சரித்த பள்ளிக்கல்வித்துறை!

Prasanth Karthick
வியாழன், 3 அக்டோபர் 2024 (10:18 IST)

பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

 

 

தமிழ்நாடு பாடத்திட்ட அடிப்படையில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாகவும், மேலும் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தினசரி வகுப்புகளை எடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
 

ALSO READ: மண்ணைக் கவ்விய இந்தியன் 2… மூன்றாம் பாகத்தை ஓடிடியில் வெளியிட திட்டமா?
 

இந்நிலையில் காலாண்டு விடுமுறை தினத்தில் நேரடி அல்லது ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும், மீறும் பள்ளிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு Ex காங்கிரஸ் தலைவர் k.s. அழகிரி தலைமையில் மௌன ஊர்வலம்!

தமிழக - கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்தி அணி வகுப்பு மரியாதையுடன் மன்னர் உடைவாள் கேரளா அரசிடம் ஒப்படைப்பு!

சென்னையை வெளுக்க போகும் மழை சீசன்? படகுகளை வாங்கி குவித்த சென்னை மாநகராட்சி!

மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டத்தில் ஹிந்தி இல்லாமல் தமிழில் அச்சிட வேண்டும்,புதுச்சேரி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்!

தனியார் தங்கும் விடுதிகளுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments