ஆவின் பால் குடித்த குழந்தைகள் வாந்தி மயக்கம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:32 IST)
சேலத்தில் ஆவின் பால் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பால் வினியோகம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 
செலம் மாவட்ட ஆவின் நிறுவனம் மூலம் ஒவ்வொரு நாளும் 5.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கும், 1.90 லட்சம் லிட்டர் பால் சேலம், நாமக்கல் மாவட்டத்தும், மீதம் உள்ள 1.35 லிட்டர் பால் பால்கோவா மற்றும் பால் பவுடர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
சேலம் மாவட்டம் பிரட்ஸ் ரோடு பகுதியில் உள்ள கடையில் வாங்கிய பாலை குடித்த குழந்தைகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
 
சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆவின் மூலம் தினமும் 2 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இது லாரி மூலம் பால் பாக்கெட்டுகள் தமதமாக வினியோகம் செய்ததால் பால் கெட்டு போயிருக்கலாம்.
 
உரிய நேரத்தில் பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்யாத லாரியின் உரிமம் ரத்து செய்யப்படும், என்று தெரிவித்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்    
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவை விட அதிக ஓட்டு!.. 18 சதவீத வாக்குகளை தவெக பெறும்!.. கொளுத்திப்போட்ட பிரவீன் சக்ரவர்த்தி..

தங்கத்தில் பசை செய்ய முடியுமா? ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கப்பசையை பறிமுதல்..!

நேருக்கு நேர் வந்த இரண்டு விமானங்கள்.. ரெக்கைகள்மோதியதால் பரபரப்பு.. மும்பையில் திகில் சம்பவம்..!

தூய்மை காவலர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை..!

வழக்கறிஞராக மாறுகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments